Skip to content

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 25000 ரூபாய் தீபாவளி முற்பணம்

தீபாவளி முற்பணம்

தீபாவளியை முன்னிட்டு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 25, 000 ரூபாய் முற்பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நாளை வியாழக்கிழமை (24) முதல் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 25, 000 ரூபாய் முற்பணம் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 25000 ரூபாய் வழங்க வேண்டும் என பெருந்தோட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கம் காணப்பட்டதாக செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

© Malaioli.com | மலைஒளி | 2024

Web Design and Development by GCloud