Skip to content

சடலமாக மீட்கப்பட்ட தனியார் வகுப்புக்குச் சென்ற மாணவி

மாணவி

தனியார் வகுப்புக்கு செல்வதாகக் கூறி தெரிவித்து சென்ற 17 வயதுடைய இரண்டு மாணவிகளில் ஒருவரின் சடலம், மஹியங்கனை லொக்கலோ ஓயாவில் இருந்து, திங்கட்கிழமை (21) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவருடன் சென்ற மற்றைய மாணவி தற்போது ரிதிமாலியத்த பொலிஸாரின் கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இரண்டு மாணவிகளும் ஒரே பாடசாலையில் படிக்கும் நண்பிகள் என்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (20) இரவு நெடுஞ்சாலையில், பயணித்த மோட்டார் சைக்கிளை மாணவி ஒருவர் நிறுத்தியுள்ளார்.

அந்த மாணவியை ஏற்றிக்கொண்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுனர். பொலிஸ் வீதித்தடை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை நகரில் உள்ள தனியார் வகுப்பிற்கு செல்வதாக கூறிவிட்டு, ஞாயிற்றுக்கிழமை (20) காலையிலேயே வீட்டில் இருந்து சென்ற இவர்கள் வீடு திரும்பாததால் பெற்றோர் பதுளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

 

© Malaioli.com | மலைஒளி | 2024

Web Design and Development by GCloud