விபசாரம் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட ஐந்து பெண்களுக்கு தலா 100 ரூபாய் அபராதத்தை நுவரெலியா நீதவான் திங்கட்கிழமை (21) விதித்துள்ளார்.
மசாஜ் நிலையத்தின் முகாமையாளர், கட்டிடத்தின் உரிமையாளர் மற்றும் ஐந்து பெண்கள் நுவரெலியா நீதவான் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.
முகாமையாளருக்கு 150,000 ரூபாயும், கட்டிட உரிமையாளருக்கு 200,000 ரூபாய் தண்ட பணம் விதிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியாவில் மசாஜ் சென்டர் என்ற போர்வையில் விபசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சுற்றிவளைப்பு நடத்தினர்.
இதன்போது, முகாமையாளர் , உரிமையாளர் மற்றும் ஐந்து பெண்கள் கடந்த 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டு நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தி திங்கட்கிழமை (21) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .
கைது செய்யப்பட்ட பெண்கள் ஐவரும் 40-50 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் அவர்கள், பொலன்னறுவை மற்றும் குருநாகல் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.