கண்டி, அனிவத்த பிரதேசத்தில் முன்னாள் துறைமுக அமைச்சரின் மருமகனின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ஆறு கோடி ரூபாய் பெறுமதியான பிஎம்டபிள்யூ ரக கார் மற்றும் பிராடோ ரக ஜீப் ஒன்றை கண்டி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
கண்டி பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குழுவொன்று, அனிவத்தையில் அமைந்துள்ள வீட்டின் கேரேஜில் இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு வாகனங்களையும் கைப்பற்றி உள்ளனர்.
இந்த இரண்டு கார்கள் தொடர்பாக அந்த வீட்டில் உள்ள எவரும் சட்டப்பூர்வமாக உரிமை கோர முடியாத காரணத்தால், இரண்டு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த இரண்டு கார்களும் சட்டவிரோதமான முறையில் துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.